கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுமார் ரூ.42 கோடி மதிப்பில் நடைபாதையை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு, அலங்கார விளக்குகள், சாலை வசதி, மழைநீரை சுத்திகரிப்பு செய்து நிலத்திற்கு அடியில் அனுப்புதல், தாமஸ் பார்க் வளைவில் மிடியா மரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மழைநீரை சாலையில் விணாக்காமல் சுத்திகரிப்பு செய்து நிலத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் 25 இடங்களில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் வரை மழைநீர் குழாய் வழியாக வந்து திருச்சி சாலை ஸ்டேன்ஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழும். இந்த தொட்டியில் 1 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்க முடியும். இந்த மழைநீர் நிலத்திற்கு அடியில் செல்லும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இந்த பணிகள் மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,
‘‘ மழைநீரை விணாக்கமல் அதனை சேகரித்து மீண்டும் நிலத்திற்குள் அனுப்ப ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 லட்சம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மேல் பசுமை புல்வெளிகள் கொண்ட தீவுத்திடல் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்காது.
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்