• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தில் தினகரன் சார்பில் பென்டிரைவ் சமர்பிப்பு

January 2, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் சார்பில் விசாரணை ஆணையத்தில் பென் டிரைவ் சமர்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே டிடிவி தினகரன், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்திருந்தது.

இந்நிலையில்,டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் பென்டிரைவை சமர்பித்துள்ளார்.இந்த பென்டிரைவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்கள் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க