• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

“ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்”: நீதிபதி

December 29, 2016 தண்டோரா குழு

“தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் தமிழக முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல், நுரையீரல் தொற்று போன்றவற்றுக்குச் சிக்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருகிறார் என மருத்துவமனை சார்பாக அறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு11:30 மணிக்கு ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்தார். அதனை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை வந்தது.

இது குறித்து நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில்,

” ஜெயலலிதா மரணத்தில் எனக்குச் சந்தேகம் உள்ளது. ‛அவர் குணமடைந்து வருகிறார், உணவு சாப்பிடுகிறார், நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்’ என செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரைப் பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்கவில்லை? ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை? இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது” என்றார் நீதிபதி வைத்தியநாதன்

மேலும் படிக்க