• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா தந்த கார்: நாஞ்சில் சம்பத் திருப்பி ஒப்படைப்பு

January 3, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா தனக்கு வழங்கிய இனோவா காரை அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பத் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) கட்சிக்கே திருப்பி ஒப்படைத்தார்.

ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயாலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு ம.தி.மு.க வி-லிருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த அவருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது அவரது பிரசார பயணத்துக்காக இனோவா காரைப் பரிசாக வழங்கினார். இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

“கடந்த 8 மாத காலமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால், கார் பயன்படுத்தப்படாமல் நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன். இந்தக் காரைப் பரப்புரைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தேன். சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதற்கு அவர் அதிருப்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் படிக்க