• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு – மு.க ஸ்டாலின்

July 31, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா எதிர்த்த அத்தனை மத்திய அரசின் திட்டங்களுக்கும் தற்போது தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

கதிராமங்லத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது,

“கதிராமங்கலத்தில் ஆய்விற்காக மட்டுமே ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அந்நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டது.

கதிராமங்கலத்தில் அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவில்லை. முன்னாள் தமழிக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசும் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை பாராமுகமாக இருப்பது ஏன்? தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த அத்தனை திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் தயவில் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.மதச்சார்பற்ற மனிதராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாமிற்கு கூட மத்திய அரசு மதசாயம் பூசுவது வேதனை அளிக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க