• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு

March 15, 2018 தண்டோரா குழு

வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்காக பல்வேறு அரசுத் துறையினர் வேதா இல்லத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  2018–19ம் ஆண்டிற்காக தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதைபோல், ஆளுநர் உரையில் ஏற்கெனவே அறிவித்தபடி மெரீனா கடற்கரையில் 80 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க