March 5, 2019 தண்டோரா குழு
ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார் என அப்பல்லோ மருத்துவமனை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரின் மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.ம் இதனை தொடந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான செலவின விவரங்களை கடந்தாண்டு வெளியிட்டது. அதில், அவர் அப்போலோ மருத்துவனையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு மட்டும் பானங்களுக்கான தொகையாக ரூ. 1 கோடியே 15 லட்சம் என ரசீது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சிகிச்சையின் போது பழரசம் மட்டுமே அருந்தினார் என்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள், மற்றும் போலீசார் என பலருக்கும் உணவு வழங்கியதால் தான் கட்டணம் ரூ.1.15 கோடி ஆனது என உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பு தெரிவித்துள்ளது.