• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.கே.வாசனை சந்தித்தார் ஒ.பன்னீர்செல்வம்.

April 6, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பல முனை போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை இன்று அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார்.

தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரிக்க வேண்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் சார்பில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கட்சி சார்பாக போட்டியிடும் மசூதனனுக்கு தன்னுடைய ஆதரவை ஜி.கே.வாசன் அளிப்பார் என்றும் இன்று மாலைக்குள் இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க