ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி 28% சேர்த்து மொத்தம் 58% வரி செலுத்த வேண்டி வரும். அதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், திரையரங்குகள் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சினிமா பிரபலங்கள் ‘ரஜினி ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை ‘என்று விமர்சிக்க தொடங்கினர்.
இதனால், இன்று இந்த பிரச்சனை பற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சினிமா துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனுக்காக, தமிழ் நாடு அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது