• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

July 5, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி 28% சேர்த்து மொத்தம் 58% வரி செலுத்த வேண்டி வரும். அதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், திரையரங்குகள் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சினிமா பிரபலங்கள் ‘ரஜினி ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை ‘என்று விமர்சிக்க தொடங்கினர்.

இதனால், இன்று இந்த பிரச்சனை பற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சினிமா துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனுக்காக, தமிழ் நாடு அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க