• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்

March 31, 2017 தண்டோரா குழு

ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 கட்டணம் செலுத்த ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இலவசசேவைகள் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தொடர்ந்து ஜியோ தொலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டுமானால், உறுப்பினர் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி,ஜியோ பிரைம் எனும் திட்டத்தில் சேர வேண்டும்.

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் இலவச சேவைகளைக் குறைந்த செலவில் பெறலாம் எனவும் எந்த ரீசார்ஜும் செய்யவில்லை என்றால் சுமார் 90 நாட்களுக்குள் ஜியோ சிம் செயலிழந்துவிடும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் ரூபாய் 303 செலுத்தி இலவச சேவையை மேலும் 3 ,மாதங்களுக்கு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க