• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜியோ பயனாளர்களுக்கு விரைவில் இன்ப அதிர்ச்சி !!

April 10, 2017 தண்டோரா குழு

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் ஜியோ வாடிக்கையாளர்களின் இலவச சேவை முடிந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் சம்மர் சப்ரைஸ் என்ற புதிய சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்தது.இந்த சலுகைகளை பயன்படுத்தி பிரைம் வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் செலுத்தி மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை பெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ட்ராய் ஜியோவின் இந்த சலுகைகளை உடனே சப்ரைஸ் பேக்கை கைவிடுமாறு கூறியது.

இதையடுத்து,கடந்த 6ம் தேதி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3 மாதம் இலவச அழைப்பு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி இணைய வசதி கொண்ட அறிவிப்பை திரும்ப பெற்றது ஜியோ நிறுவனம். இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் ,மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், ஜியோ நிறுவனம் தனது அதிகார்பூர்வ இணையதள பக்கத்தில் விரைவில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல புதிய சலுகைகளை கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க