• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு இல்லை

January 20, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வருவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையில் குறுக்கீடாமல் இருக்க ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குத் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி ஜல்லிக்கட்டு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு வாரத்திற்கு எவ்வித தீர்ப்பும் வழங்கக் கூடாது. தமிழக அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

மேலும் படிக்க