• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 2 தமிழக வீரர்கள் பலி

January 28, 2017 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் தஞ்சை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி ஏற்கனவே 10 வீரர்கள் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை காலையில் மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் இளவரசன் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இவருடைய பெற்றோர் பூமிநாதன், அமுதா ஆகியோர் கூலித் தொழிலாளர்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் பி.ஏ. வரை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், ராஷ்ட்ரீய ரைபிள் குழுவில் ராணுவவீரராகப் பணியாற்றி வந்தார்.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொருவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காப்பட்டியைச் சேர்ந்த சுந்தர்பாண்டி (26) என்ற ராணுவ வீரர் என்று தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு திருமணமான சுந்தரபாண்டியின் மனைவி பெயர் சுகப்பிரியா. தற்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும் படிக்க