• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டு கொலை

June 14, 2018 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பத்திரிக்கை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி. இவர் இன்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது காரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், குண்டடிபட்ட சுஜாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கும் குண்டடி ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க