December 11, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனமானது பிரீமியம் எஸ்யூவி பிரிவில் அதன் அடுத்த பெரிய வெளியீடாக எக்ஸ்யூவி7எக்ஸ்ஒ மாடலை அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குள் 300,000க்கும் மேற்பட்ட பெருமைமிக்க உரிமையாளர்களுடன் இந்தியாவில் எஸ்யூவி பிரிவில் புரட்சியை ஏற்படுத்திய எக்ஸ்யூவி 700 ன் மரபில் உருவாக்கப்பட்ட எக்ஸ்யூவி7எக்ஸ்ஒ சீரிஸ் ஆனது எக்ஸ்யூவி 700 மாடல்களில் ஒரு கேம்சேஞ்சராக மாறிவருகிறது. ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது, எக்ஸ்யூவி 700 -வின் சிறப்பம்சங்களான சிறந்த வடிவமைப்பு, தொழில்நுட்பம், கம்ஃபர்ட் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது.
இது வெறும் பரிணாம வளர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், உண்மையிலேயே அசாதாரணமான ஒரு எஸ்யூவி -ஐ வழங்குகிறது. பிரீமியம் எஸ்யூவி துறையில் மஹிந்திராவின் தலைமையை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட எக்ஸ்யூவி7எக்ஸ்ஒ, நாளைய எஸ்யூவி களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.