• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் -மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பு

December 24, 2019

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்றத்திற்கான மாணவர் அமைப்பினர் கோவை எஸ்.பி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பெற பெற வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லியின் கழிவுவறைக்குள் சென்று மாணவிகளை கொடூரமாக தாக்கியதை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

மேலும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடுத்துள்ளதால், வரும் ஜனவரி 2 ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பு சார்பாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர், இதனால் சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டது இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் படிக்க