• Download mobile app
09 Mar 2026, MondayEdition - 3680
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்

December 31, 2016 தண்டோரா குழு

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 வரை எடுக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அப்போது , வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி இது அமலுக்கு வருகிறது.

அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாகப் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனவே, பணம் எடுக்கும் வார உச்ச வரம்பு, அதே ரூ.24,000 என்று தொடர்கிறது.

இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க