• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனநாயக வழியில் போராட்டம் தொடரும் – எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர்

December 20, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை ஜனநாயக வழியில் போராட்டம் தொடரும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள எஸ்டிபி ஐ அலுவலகத்தில் , அதன் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர்களை
சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் இது மக்களை பிளவு படுத்துவதோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆரியர்களுக்கு குடியுரிமை தரும் சட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இச்சட்டம் திரும்ப பெறப்பட்டு, அவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, மேற்கொண்ட எந்த அரசின் சட்டமும், ஆட்சியும் நிலைபெற்றதாக உலக வரலாற்றில் சரித்திரம் இல்லை, இது மோடி அமித்ஷாவுக்கு பொருந்தும்.

உச்ச நீதிமன்றத்தில்,இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போடப்பட்ட வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காமல், போராட்டத்தை நிறுத்திவிட்டு தங்களை அணுக கோருவது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், இந்த சட்டத்தை வாபஸ் பெற ஆணையிட வேண்டும் என்றார்.எடப்பாடி அரசு,ஈழத்தமிழர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்வதாகவும், ஜெயலலிதா எதிர்த்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது மாபெரும் தவறு என குற்றம் சாட்டினார். தமிழக அரசுக்கு, மக்கள் மன்றத்தில் சரியான விலையை , மக்கள் தருவார்கள் என்ற எச்சரிக்கை விடுத்தார். எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக , மக்கள் திரளை கூட்டி சென்னை மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த இருப்பதாகவும், இதன் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் போராடிய தேசிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதை, கண்டிப்பதாகவும், ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜிகாதிகள் ,மாவோயிஸ்ட்கள் நுழைந்து விட்டார்கள் என்ற எம் ஜி ஆர் பாணி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றார்.

இந்தியா முழுவதும் , மக்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.தமிழக அரசு காஷ்மீரைப்போல தமிழகத்தை சித்தரித்து, காவல் துறையினரை வைத்து சிறுபான்மையினர் மற்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது, அடக்கு முறைகளை கையாள்வதாக குற்றம் சாட்டினார்.வன்முறை மொழியால் பேசினால் குடிமக்கள் பயப்பட மாட்டார்கள். ஏபிவிபி மாணவர்கள் ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, காவல் துறை துணையோடு தாக்குவதாக தெரிவித்தார்.அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம் நடைபெறுவதாகவும், அரசுக்கு எதிராக கிடையாது என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் என்றார்.

தமிழக அரசு மக்களின் நலன் உணர்வு சார்ந்து நிற்க வேண்டும்..அதை விட்டு மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். இந்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சொல்லியிருக்க வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது முதல்வருக்கு அழகல்ல என்றார்.கோவை அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரானவர்கள் கடையடைப்பு , கருப்பு கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்த போராட்டம் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறும் வரை, ஜனநாயக வழியில் நடைபெறும் எனவும், அதற்காக எந்த விலையும் கொடுக்க தயார் என்றார்.

மேலும் படிக்க