• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஜடேஜா திருமண விழாவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு.

April 18, 2016 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ராஜ்கோட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இந்திய அணியின் ஆல்ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கும் அவரது பால்ய தோழியான ரிவா சோலங்கிக்கும் நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு அருகில் திடீரென துப்பாக்கி குண்டுகள் முழங்கிய சத்தம் கேட்டது. அதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை பார்த்தபோது, அதில் ஜடேஜாவின் உறவினர் ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளது தெரியவந்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதால் எச்சரிக்கை செய்து விடப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது,

உரிமம் பெற்ற துப்பாக்கி என்றாலும், தற்காப்பு என்ற காரணத்தை தவிர மற்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு பயன்படுத்தும் பொது பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிய முகாந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

ஆனால் இந்தத் துப்பாக்கி சூட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் யாரும் இதைப்பற்றி புகாரும் கொடுக்கவில்லை என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார் எனவும் தெரிவித்தனர்.

உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்காக மட்டுமே சுட வேண்டும் என்பது தான் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைகளை மீறும் போது 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கச் சட்டத்தில் வழிவகை உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க