• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது

September 7, 2017 தண்டோராகுழு

கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஐந்து பேர் வரை இறந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் வளாகம் மற்றும் அதில் இருந்த கடைகளும் தீடிரென இடிந்து விழுந்தன.இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லின் மற்றும் கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் திருப்பூர்,கோவை,பல்லடம் பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.இந்த திடீர் விபத்தில் ஐந்து பேர் வரை இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.மீட்பு நடவடிக்கைக்குப் பின்னரே முழு விபரங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க