• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோமனூரில் பராமரிப்புப் பணி கோவை ரயில்கள் 25,26 ஆம் தேதி பகுதியாக ரத்து

September 17, 2021 தண்டோரா குழு

கோவை -திருப்பூர் இடையே சோமனூர் பகுதி ரயில்வே பாதையில், பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் செப்டம்பர் 25,26 தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

லோகமான்யா திலக் – கோவை சிறப்பு ரயில் செப்டம்பர் 23, 24 மற்றும் 30 தேதிகளில் லோகமான்யா திலக் நிலையத்தில் புறப்பட்டு, செப்டம்பர் 25, 26 மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதிகளில் கோவை நிலையத்தை அடைய வேண்டும். ஆனால், கோவை -திருப்பூர் இடையே சோமனூர் பகுதியில் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செப்டம்பர் 25, 26 மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதிகளில் ஈரோடு- கோவை இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை – லோகமான்யா திலக் ரயில் செப்டம்பர் 25,26, அக்டோபர் 2 தேதிகளில் கோவை – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில், இந்தச் சிறப்பு ரயிலானது, ஈரோடு நிலையத்தில் காலை 10.30 மணிக்கு லோகமான்யா திலக் நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும். கோவை – நாகர்கோயில் சிறப்பு ரயில் செப்டம்பர் 25,26 தேதிகளில் கோவை – திருப்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில், இந்தச் சிறப்பு ரயிலானது, திருப்பூர் நிலையத்தில் இருந்து 8.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும். பாலக்காடு டவுன் – திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில்

செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில்,க இந்தச் சிறப்பு ரயிலானது, ஈரோடு நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க