• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோனியா காந்தி நகரில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆட்சியரிடம் மனு

November 28, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கிடவு பகுதி சோனியா காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடபுதூர் கிராமம் சோனியா காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டண வரி ஆகியவற்ற முறையாக செலுத்தி வருகிறோம்.

ஆனால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சாலை வசதி, சாக்கடை வடிகால் வசதி போன்றவைகள் இல்லை. வீட்டுமனைகளில் இருந்து வருகின்ற கழிநீரை வெளியேற்ற முடியாமல் மழை காலங்களில் பெய்து வருகின்ற மழை நீர் சாக்கடை கழிவுடன் கலந்து தேங்குகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளாகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்து சொல்லியும், ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.ல் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க