• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்து வரி உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் : டாக்ட் கோரிக்கை

April 5, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.இதனால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படையும்.கடந்த இரண்டு வருடங்களாக தொழில்துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.தொழிலாளிகள் வேலை இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

வியாபாரிகள் கடுமையான வீழ்ச்சி கண்டு உள்ளனர்.மக்கள் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், வரி உயர்வால் நகர்புற பகுதியில் வீட்டு வாடகை உயர்த்தப்படும். தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் குறு சிறு தொழில் முனைவோர்களின் கட்டிடங்களின் வாடகை உயர்த்தப்படும்.எனவே, மக்களின் நலன் கருதி சொத்து வரி உயர்வை அரசு ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க