• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தும் பணிகள் மீண்டும் துவக்கம்

July 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதப் வெளியிட்ட அறிக்கையில்,

‘கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சொத்து வரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்று வந்தது. ஆகையால் பொதுமக்கள் இந்த நியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது மேற்குறிப்பிட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்புகள் கணினி மென்பொருளில் எழுப்பப்பட்டுள்ளது. ஆகையால் 7ம் தேதி முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம்’

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க