• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேற்றில் சிக்கிய பசு மாட்டை கயிறு கட்டி இழுத்து காப்பாற்றிய தீயணைப்புத் துறை வீரர்கள்

August 7, 2021 தண்டோரா குழு

கோவையில் சேற்றில் சிக்கிய பசு மாட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு கட்டி இழுத்து காப்பாற்றியுள்ளனர்.

கோவை குறிச்சி குளக்கரையில் தனியாருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தது.அப்போது குளக்கரையில் இருந்த சேற்றில் சிக்கி கீழே விழுந்த மாடு, அங்கிருந்து எழ முடியுமால தவித்தது.கோவை குறிச்சி குளத்தில் சேற்றில் சிக்கிய பசு மாட்டை காப்பாற்றினார்கள்.

இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் அங்கு சென்ற கோவை தெற்கு தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பசு மாட்டை மீட்டனர்.சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேலும் படிக்க