• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக விளம்பர எல்இடி திரைகள் வைப்பு

July 19, 2022 தண்டோரா குழு

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியானது தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பிரதான அலுவலகம் டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவலகங்கள், வஉசி பூங்கா, வஉசி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, பன் மால், டைடல் பார்க், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க