• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி கூரியர் நிறுவன ஊழியர்கள் 2பேர் மீது வழக்கு

September 29, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (45). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்நிறுவனத்தில் சாந்திஸ்வரன், பார்த்திபன் ஆகியோர் டெலிவரி ஊழியராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களில் ஆர்டர் செய்து வாங்கும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளனர். இதுவரை அவர்கள் இருவரும் ரூ.4.40 லட்சம் மதிப்பிலான 49 செல்போன்களை டெலிவரி செய்யாமல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விஜயன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சதீஸ்வரன், பார்த்திபன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க