• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செயற்கை மழையை வர வைத்தாவது தாமரையை மலர செய்வோம் – ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

December 4, 2018 தண்டோரா குழு

செயற்கை மழையை வர வைத்தாவது தாமரையை மலர செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல் கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில்,திருமாவளவன்..ஆர்ப்பாட்டத்தில்…பேசுகிறார்..”திமுக அணியை..பலவீனப்படுத்த..பாஜக..முயல்கிறது..என்கிறார்…ஆக இவரின் கவலை..அணை யைப்பற்றியது அல்ல…அணி யைப்பற்றியதுதான்! என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க