• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

January 25, 2021 தண்டோரா குழு

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச விண்வெளி மையம் மற்றும் மார்ட்டின் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தின.

கேபிஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராமசாமி வழிகாட்டுதலின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வரும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அகிலா மற்றும் இஸ்ரோ எஸ் எஸ் எல் வி விஞ்ஞானியும் திட்ட மேலாளரும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆலோசகருமான கோகுல் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக நாடு முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதற்காகவும் 100 சிறிய செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு மாணவர்களின் அறிவு மற்றும் திறமைகளை பயன்படுத்துவதையும் இந்தப் பயிற்சிப்பட்டறை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவிடும் வகையில் மார்ட்டின் குழுமம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது இதில் தயாரிக்கப்படும் சிறந்த சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் ராமேஸ்வரத்தில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விண்ணில் பலூன் மூலம் ஏவப்பட உள்ளது.இந்த பயிற்சி பட்டறையில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் தயாரிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவை குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.

இந்த செயற்கைகோள்கள் விவசாயம் கதிர்வீச்சு புற ஊதாக் கதிர்வீச்சு இயற்கை கலப்பு பொருட்கள் அதிர்வு காற்றின் வேகம் புவிவெப்பமடைதல் ஓசோன் மண்டலம் தொடர்பான பல்வேறு தரவுகளை மாணவர்களுக்கு கற்று கொடுக்க பட்டது இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விமான தலைமையகம் தஞ்சாவூர் விமானப்படை தளம் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றில் இருந்து முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளன இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்திய சாதனை அமைப்பும் கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க