September 29, 2018
தண்டோரா குழு
சென்னையைச் சேர்ந்த மஹாராஜா என்பவர் கேரளாவில் நிதி மோசடி செய்த புகாரில் கைது செய்தபோது உறவினர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி கேரள போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சென்னை, நெற்குன்றம், நடேசன் நகரை சேர்ந்தவர் மஹாராஜா, 41. வழக்கு ஒன்று தொடர்பாக இவரை பிடிக்க, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பல்லுருதிக்காவல் நிலையத்தை சேர்ந்த, 8 காவலர்கள் இன்று(செப்.,29) மதியம், 1:00 மணியளவில், நெற்குன்றம் சென்றனர். அப்போது அவரது உறவினர்கள் கைது செய்யக் கூடாது என்று தடுத்தனர். மஹாராஜா நிதி மோசடி செய்தது குறித்து போலீஸார் உறவினர்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் கேரள போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மஹாராஜவை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.