• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்

March 31, 2017 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நீதிபதி எச்.ஜி ரமேஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுவந்தார்.

எனினும், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.

கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்தவரான இந்திரா பானர்ஜி, கடந்த 1985ஆம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இவர் 17 வருட வழக்கறிஞராக இருந்த பின் , 2002ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.

அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க