• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

November 25, 2021 தண்டோரா குழு

சூலூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் நீண்டகாலமால எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, திமுக ஆட்சி அமைந்ததும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரியவருகிறது.இந்த சூழலில் கள்ளப்பாளையம் கிராமப்பகுதி மக்கள் இன்று அப்பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதை அறிந்த சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வி.பி கந்தசாமி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.மேலும், அவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமையாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் இங்கு சில சமூக விரோதிகள் டாஸ்மாக் கடையை அமைக்க திட்டமிடுகின்றனர்.

எனவே கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் இந்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.” என்றார்.

மேலும் படிக்க