• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

November 25, 2021 தண்டோரா குழு

சூலூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் நீண்டகாலமால எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, திமுக ஆட்சி அமைந்ததும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரியவருகிறது.இந்த சூழலில் கள்ளப்பாளையம் கிராமப்பகுதி மக்கள் இன்று அப்பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதை அறிந்த சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வி.பி கந்தசாமி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.மேலும், அவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமையாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் இங்கு சில சமூக விரோதிகள் டாஸ்மாக் கடையை அமைக்க திட்டமிடுகின்றனர்.

எனவே கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் இந்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.” என்றார்.

மேலும் படிக்க