• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

August 26, 2021 தண்டோரா குழு

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது இந்த கோரிக்கை மனுவில் கிராம ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தை அணுகும்போது ஊராட்சித் தலைவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவி வருகின்றனர்.

பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து மக்கள் பணிகளை கவனிக்க அனுமதிப்பதும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் தினக்கூலி அடிப்படையில் கிராம ஊராட்சி செயலர்களுக்கு உதவும் விதமாக வரிவசூல் பணிகளுக்கு வசூல் உதவியாளர் மற்றும் கணினி உதவியாளர்களை தொகுப்பூதியம் அல்லது தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் கிராம ஊராட்சிகளில் தெருவிளக்குகள் பராமரித்தல் மற்றும் மின் கம்பங்களில் பொருத்தம் பணிகளை மேற்கொள்ள மின் பணியாளர்களை நியமிக்க வேண்டும் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருடன் மனு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க