மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்யக்கோரி பெரியார் கூட்டமைப்பு சார்பில் ஆட்சித்தலைவரிடம் புகாரளித்தனர்.
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் சுவற்றின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அதே பகுதியைச்சேர்ந்த சிவ லட்சுமணன் என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் திலக் காவல் நிலையத்தில் வைத்து அடித்து , அவரது கையை நசுக்கி, விரலை ஒடித்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 17 பேரின் இறப்புக்கு நியாயம். கேட்டு போராடிய 26 பேர் கைதை திரும்ப பெற வேண்டுமெனவும்,தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை குறிவைத்து தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியார் கூட்டமைப்புகள், தலித் அமைப்புகள்,வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித்தாலைவரிடம் மனு அளித்தனர்.
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்
கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது
தொழில்துறைக்கான ஆட்டோமேஷன்தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு புதிய ஸ்மார்ட் தீர்வுகள்: லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு