• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு முக ஸ்டாலின் நேரில் ஆறுதல்

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுசுவர் இடிந்து விழுந்து 4 வீடுகள் தரைமட்டமானது.

இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுசுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.சுவர் பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்து இருக்கின்றனர் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசு,அமைச்சர், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்

இறந்தவர்களின் உடலை திருட்டுதனமாக பிரேதபரிசோதனை செய்து இருந்து எரியூட்டி இருக்கின்றனர்.உடலை உரியவர்கள் வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். பொது மக்களும் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.போராடியவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.அதில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 4 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அதை அதிகப்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன்,
வீடும் கட்டித்தரவேண்டும விபத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வெட்ககேடானது. சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

மேலும் படிக்க