• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை புனரமைக்கும்‌ பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

November 2, 2022 தண்டோரா குழு

கிழக்கு மண்டலம்‌ வார்டு எண் 58க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தை ரூ.5.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கும்‌ பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆர்‌.கே.கார்டன்‌ பகுதி, வார்டு எண்‌.57-க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, சிந்து நகா்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார் பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

மேலும் படிக்க