• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீயானுக்காக வருந்தும் திரையுலக பிரபலங்கள்.

March 29, 2016 வினித்ராஜா .க

63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்புகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து ஐ படத்தின் ஒளிப்பதிவாளரும் தனது எதிர்ப்பினை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “தேசிய விருதுகள் பல சமயத்தில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது. இது விக்ரமுக்கு கிடைத்த இழப்பு அல்ல. தேசிய விருதுகளுக்கான இழப்பு” என்றார்.

அதுமட்டுமின்றி விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் ஐ படத்தில் நடித்த விக்ரம் ஆகியோருக்கு விருது கிடைக்காதது தனக்கு வருத்தமளிப்பதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

மேலும் ஐ படத்துக்காக விக்ரம் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை சமுத்திரக்கனி பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க