கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மருத்துவ கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருடன் அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள்.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாகவே அரசு மருத்துவமனை கல்லூரியில் உள்ள பிரசவ வார்டுக்கு சீனியர் மருத்துவர்கள் வருவதில்லை என்றும் ஜூனியர்கள் மட்டுமே வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேர்ல மருத்துவ மனை அதிகாரிகள் சீனியர்களாக பார்த்து பார்த்து பணிக்கு அனுப்பிவந்தனர். ஆனால் பின்னரும் அதே குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
பின்னர் அது குறித்து நேரடியாக விசாரணை செய்யும்போது தான் ஒரு உண்மை புரிந்தது. குற்றம் சாட்டிய பெண்கள் சிலர் எப்படி சீனியர் மருத்துவர்கள் வருவதில்லை எனக் கூறுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ஒருவர் கூட புடவை கட்டி வருவதில்லை அனைவரும் சுடிதார் போட்டே வருகின்றனர் எனப் பதில் கூறியுள்ளனர்.
அதனால் அந்த அரங்கில் உள்ள அனைவருமே சிரித்துள்ளனர். பின்னர் மருத்தவமனை நிர்வாகிகள் அவர்களிடம் வருபவர்கள் எல்லோரும் சீனியர் மருத்துவர்கள் தான் ஆனால் அவர்கள் சுடிதார் போட்டு வருவதால் ஜூனியர் என நினைத்துக்கொண்டு புகார் தெரிவிக்கக்கூடாது எனக் கூறி சமாதானப்படுத்தினர். இதனால் அந்தக் கூட்டத்திற்கு சுடிதார்ல வந்த சீனியர் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உருவத்தைப் பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்லுவார்கள் ஆனா சுடிதார் போட்டவங்க எல்லாம் ஜூனியர் புடவை கட்டுனவங்க சீனியர்ன்னு கொள்கை வைத்திருக்கும் மக்களை என்ன செய்வதுன்னு புரியல.
மைன்ட் வாய்ஸ் … இப்போவும் சீனியர் டாக்டருங்க எல்லாம் சுடிதார்ல வராங்களான்னு எனக்கு தெரியல வேணும்னா நீங்களே பொய் விசாரிச்சுக்கொங்க……
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை