June 8, 2018
தண்டோரா குழு
கோடை காலம் வந்துவிட்டாலே இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகமாக இருக்கும்.வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை,மதுரை,வேலூர்,ஹைதராபாத்,டெல்லி என இந்த வரிசையில் அதிகப்பட்ச வெப்ப நிலை பதிவாகும் இந்திய நகரங்களை தொடர்ந்து சீனாவிலும் அதுபோன்ற பல இடங்கள் உள்ளன.இமய மலையால் கவரப்பட்டிருக்கும் சீனா அதற்கு இணையாக வெப்பம் மண்டல பகுதிகளும் பல அந்நாட்டில் உள்ளன.
இந்நிலையில் சீனாவில் சுட்டரிக்கும் வெயில் சூட்டில் பெண் ஒருவர் அவரது கார் முன்பக்கத்தில் 4 முதல் 5 மீன்களை கார் ஹூடு சூட்டில் வைத்து சமைத்துள்ளார்.சீனாவில் தற்போது அடிக்கும் 40 டிகிரி வெயிலால் காரில் வைக்கப்பட்ட மீன்கள் சீக்கரத்திலேயே வெந்துவிட்டன.சீனா பெண்மணி கொளுத்தும் வெயிலை மீன் வறுத்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.கடந்த வருடம் கடும் வெப்பத்தினால் தெலங்கானாவை சேர்ந்த ஒரு பெண் தரையில் ஆம்லெட் சமைத்த வீடியோ வெளியிட்டு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.