• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீதையை கடத்தியவர் ராமர்! குஜராத் பாட புத்தகத்தால் குழப்பம்

June 1, 2018 தண்டோரா குழு

குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12-ம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராமாயணம் கதையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சமஸ்கிருத மொழியில் கவிஞர் காளிதாசர் ராமாயணத்தை ரகுவம்சம் என்னும் பெயரில் கவிதை நூலாக பாடி உள்ளார்.இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்புக்கான சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் அம்மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ராமாயணத்தில் சீதையை கடத்திச் சென்றது ராவணன் என்பதற்கு பதிலாக ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கண புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தவறான வாசகம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது குறித்து மாநில பள்ளி பாடநூல் கழக நிர்வாக தலைவர் நிதின் பதேனியிடம் கேட்ட போது,

முதலில் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். பின்னர் தவறை ஒப்புக் கொண்ட அவர்,இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகும். இதில் ராவணன் என குறிப்பிடுவதற்கு பதிலாக ராமன் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது குஜராத் பாடநூல் கழகத்தின் தவறு இல்லை என பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க