• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் -ரஜினிகாந்த்

March 21, 2018 தண்டோரா குழு

சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இமயமலை பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இன்று தென்சென்னை மாவட்ட,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரைசிங் மூலம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“இதயத்தை, எண்ணங்களை தூய்மையாக வைக்க வேண்டும். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசியலில் மாற்றத்தை கொண்டு வர நாம் உழைக்க வேண்டும், சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்காமல், ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் ,அவர் மீதமுள்ள 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க