• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் – தமிழக அரசு

December 3, 2019 தண்டோரா குழு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிவடைந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இவர் ஏற்கனவே காவல் துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க