• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறையில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம் !

October 8, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநிலத்தில் சிறையில் உள்ள பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புனே சிறைத்துறையில் நாட்டிலேயே முதல் முறையாக வீடியோ கால் மூலம் பேசும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக சிறைக் கைதிகள் நல நிதியில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட நாளில் 5 நிமிடத்திற்கு கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 நிமிடம் பேச ரூ.5 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், கைதிகள் வீடியோ கால் பேசும் பொழுது கான்ஸ்டபுள் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குடும்ப விசயங்கள் தவிர்த்து வேறெதுவும் பேச கைதிகளுக்கு அனுமதியில்லை என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இடையடுத்து, புனே யெரவாடாவில் உள்ள பெண்களுக்கான சிறையில் வீடியோ கால் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க