• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம் !

October 8, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநிலத்தில் சிறையில் உள்ள பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புனே சிறைத்துறையில் நாட்டிலேயே முதல் முறையாக வீடியோ கால் மூலம் பேசும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக சிறைக் கைதிகள் நல நிதியில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட நாளில் 5 நிமிடத்திற்கு கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 நிமிடம் பேச ரூ.5 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், கைதிகள் வீடியோ கால் பேசும் பொழுது கான்ஸ்டபுள் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குடும்ப விசயங்கள் தவிர்த்து வேறெதுவும் பேச கைதிகளுக்கு அனுமதியில்லை என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இடையடுத்து, புனே யெரவாடாவில் உள்ள பெண்களுக்கான சிறையில் வீடியோ கால் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க