• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

March 18, 2022 தண்டோரா குழு

சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் (தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்கார்சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர்) இந்த பிரச்சார வாகனங்களில் செல்ல உள்ளது.

மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானியங்களின் நன்மைகள் குறித்தான குறிப்புகள், சிறு தானியங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. மேலும் 2023ம் ஆண்டினை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை எடுத்துரைக்கவும் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்த பிரச்சார வாகன துவக்க நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க