• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு

January 25, 2021 தண்டோரா குழு

சிறப்பாக பணிபுரிந்த
வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு
சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த 23 வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், 4 மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

இதனை தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் புதிய வாக்காளர்கள் ஆகியோர் வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:

இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி ‘தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும், மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து, கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க