• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரியாவில் படுகொலையை தடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

February 27, 2018 தண்டோரா குழு

சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் பல குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்து வருவதால் உடனடியாக அங்கு நடைபெறும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கோவை வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்த பிறகும் அங்கு இரண்டாவது நாளாக தொடர்ந்து வான் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

மேலும்,இதுவரை இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள்.அதேபோல் காயம் அடைந்ததும் குழந்தைகளே. இந்த  தாக்குதலை தடுக்க ஐ நா நடவடிக்கை எடுக்க கோரியும், சிரிய அரசு போரை நிறுத்த கொள்ள வேண்டியும் கோவை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, சிரியா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க