• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்

January 8, 2019

சிம்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கிடையில், படத்தின் இயக்குநர் தொடர்ந்து சிம்பு மீது பல்வேறு விமர்சனம் செய்தும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தும் இருந்தார்.

இதையடுத்து, நடிகர் சிம்பு தன்னை பற்றி தவறாக மைக்கேல் ராயப்பன் பேட்டி கொடுப்பதாகவும்,தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் ராயப்பன்தனக்கு கோடிக்கணக்கில் சம்பள பணம் தர வேண்டியுள்ளது எனவும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ஜன.18க்குள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க