• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு

March 9, 2022 தண்டோரா குழு

தனியார் டிரஸ்ட் நிறுவனம் கோவை மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் கோவை சின்னதடாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளது.

இப்பள்ளியில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதிமூலமாக அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த 520 மாணவிகளுக்கு விளையாட்டு வசதிகள் அளிக்கப்படும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வருவது போன்ற நோக்கங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தபடும். இந்த ஆண்டு ஒரு கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கபடி ஆடுகளம் மற்றும் செயல்பாடுகளுக்கான அரங்கம் ஆகியவை உருவாக்கப்படும்.

வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.இதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தனியார் டிரஸ்ட் அறங்காவலர் கையெழுத்திட்டு அதனை மாவட்ட
ஆட்சியர் சமீரனிடம் வழங்கினார்.

மேலும் படிக்க