• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் காவல்துறையின் மனிதநேயம்

March 30, 2020 தண்டோரா குழு

சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே நேற்று 9மாத நிறைமாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்த அடுத்து அப்பெண்ணை மீட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கோவை சிங்காநல்லூர் அருகே நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் நடக்க முடியாமல் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும்
அவரது கணவரும் நடந்து வந்தனர்.
அப்போது திடீரென்று நிறைமாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்தார். அப்பொழுது வெளியே காவலுக்கு நின்றுகொண்டிருந்த சிங்காநல்லூர் தலைமை காவலர் புனிதவதி மற்றும் சிறப்பு போலீசார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஓடிச்சென்று அந்த அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்து அவர்களை விசாரித்த பொழுது பல்லடம் அருகே உள்ள கொடுமுடியை சேர்ந்த தம்பதிகள் என்று தெரியவந்தது

அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சுளா வயது 28 அவரது கணவர் பெயர் விக்னேஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர்கள் கூலி வேலை செய்பவர்கள்,தற்போது அரசு மருத்துவமனைக்கு உடல் நல பரிசோதனைக்காக கடந்த வாரம் வந்தவர்கள் பஸ் போக்குவரத்து பிரச்சனையால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கிவிட்டனர். தற்போது ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ல் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திருச்சி சாலையில் நடந்து வந்துள்ளது தெரியவந்தது.

அப்போது சிக்னல் அருகே வரும்பொழுது தலை சுற்றி கீழே விழுந்ததாக கூறினார்கள், இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரின் பரிந்துரையின்பேரில் ஆத்மா அறக்கட்டளை நிறுவன நிறுவனர் வந்தவர்களிடம் தொடர்புகொண்டு கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது கணவரையும் அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுமாறு கூறினார். இதையடுத்து,ஆத்மா அறக்கட்டளையின் சார்பாக அவர்கள் சொந்த ஊரான கொடுமுடிக்கு இலவசமாக சென்று விடப்பட்டது.

மேலும் படிக்க