• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை ஓர வியபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும்

February 6, 2018 தண்டோரா குழு

கோவையில் சாலை ஓர வியபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என்று  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

கோவையில் சாலை ஒர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(பிப் 6) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு சாலை ஓர திருவிழா  வியாபாரிகள் சங்கம்  தலைவர் தேவராஜ் கூறுகையில்

“திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகளை அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள அரசு நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்து உள்ளோம்.அதன்படி உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாக கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றியுள்ளோம்”.என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை விரைவில் சிறப்பு முகாம் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்கிறோம் என உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க